அக்கா தாமரைக்கு ராஜு வழங்கிய பொங்கல் பரிசு: நெகிழ வைத்த காட்சி
பிக்பாஸ் வீட்டில் பொங்கல் கொண்டாட்டத்தினைத் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு சில விளையாட்டுகளை பிக்பாஸ் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.
இதில் பெண் அணியும் ஆபரணங்களை வைத்து விளையாட்டு நடைபெற்றுள்ளது. இதில் வருண் வளையல் ஒன்றினை பரிசாக பெற்ற நிலையில், இதனை பாவனிக்கு அளித்துள்ளார். காரணம் பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் போது பாவனிக்கு மட்டும் பரிசு எதுவும் கிடைக்கவில்லை என்று வருண் கூறியுள்ளார்.
அடுத்ததாக ராஜு டார்கெட் செய்து வளையல் ஒன்றினை பரிசாக பெற்றதோடு, அதனை தனது அக்காவான தாமரையின் கையில் அணிவித்துள்ளார். நெகிழ்ச்சியான ப்ரொமோ காட்சி இதோ...