50 லட்ச பரிசுத் தொகையில் மனைவிக்கு என்ன செய்யப் போகிறார்? முதன்முதலாக மனம்திறந்த ராஜு
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ராஜு பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். தற்போது மிகவும் பரபரப்பாக இருக்கும் ராஜுவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எந்த இடத்திலும் தனது பொறுமையினை இழக்காமல் மக்களைக் கவர்ந்தவர் தான் இவர். பிக்பாஸ் டைட்டிலை வென்ற இவருக்கு ரூபாய் 50 லட்சம் பரிசாகவும் கிடைத்தது.
மிகவும் எளிமையாக வந்த ராஜுவின் மனைவியும் அனைவராலும் கவரப்பட்டவர் ஆவார். ஆனால் ராஜுவிற்கு ஏற்ற ஜோடி என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வெற்றிக்கு பின்பு பேசிய ராஜு, தற்போது ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், கத்தியாக தனது கதாபாத்திரத்தினை தொடர்வது சிரமம் என்று கூறியுள்ளார்.
மேலும் பரிசுத்தொகை வைத்து மனைவிக்கு என்ன பரிசு அளிக்க போகிறீர்கள் என ராஜுவிடம் கேட்கப்பட்டது. இதற்கு மொத்த பணத்தையும் அவளுக்கு தான் தருவேன் என்றும் இதுவரை எதுவுமே என்னிடம் எதிர்பார்க்காத தன் மனைவியை இனி வெற்றி பணத்தை வைத்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.