தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு சம்பவம் - மனைவி மீது உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி! நடந்தது என்ன?
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பானது கடந்த சில நாட்களாகவே சினிமா வட்டாரத்தில் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
வெளியுலகத்திற்கே இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும் குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே பல நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த பிரச்சினையை பற்றி ஆரம்பத்திலேயே ஐஸ்வர்யா தாயார் லதா ரஜினியிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினிகாந்த் குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கதான் செய்யும், அதை ஏன் பெரிது படுத்துற என சொல்ல, அதற்கு லதாவும் பிரிய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
உடனே ரஜினியும் கல்யாணமாகி இத்தனை வருடங்கள் கழித்து ஏன் பிரியப்போகிறார்கள் என அதெல்லாம் நடக்காது நீ போய் சமாதானம் கூறு என தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், அதன் பின்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அறிவித்த செய்தி ரஜினியை சோகத்தின் எல்லைக்கே கொண்டுசென்றுள்ளது. அப்போதே இருவரையும் கூப்பிட்டு லதா பேசியிருந்தால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைத்திருக்ககூடும்.
இப்போது இப்படி ஆகிவிட்டது என ரஜினி கோபத்தில் யாருடனும் பேசாமல் இருந்து வருகிறாராம். பின்னர், எதாவது லதா ரஜினிகாந்த் பேச சென்றால், கோபத்தில் என்னிடம் எதுவும் இப்போ பேசவேண்டாம் என கூறிவிட்டாராம்.
செளந்தர்யாவிடம் மட்டுமே ரஜினி பேசுவதாகவும் மற்றவர்களிடம் அமைதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனைத்தொடர்ந்து ரஜினி கோபம் போக வேண்டும் என்றால், தனுஷ் ஐஸ்வர்யா மீண்டு ஒன்று சேர வேண்டும் எனவும், இதற்காக லதா ரஜினிகாந்த் மகளிடம் எடுத்துக்கூறி வருகிறாராம்.
எப்படி இருந்தாலும், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா எடுக்கும் முடிவு தான் இறுதி என தெரிகிறது. ஏனென்றால் இந்த பிரச்சினை பல வருடங்களாக சென்று கொண்டிருக்கிறது.