ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்களால் பரபரப்பு... என்ன நடந்தது தெரியுமா?
ரஜினி கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் மோசன் ஃபோஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் ஃபோஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே அண்ணாத்த படத்தின் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது .
இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த அவர்களின் அண்ணாத்த கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்த சம்பந்தப்பட்ட ரசிகர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது .