உலகத்தில் இப்படியொரு பாம்பை பார்த்திருக்கவே மாட்டீங்க... தீயாய் பரவும் காணொளி
வானவில் கலரில் வண்ணமிகு பாம்பு ஒன்றின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் விஷமும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம்.
ஆனால் அதே பாம்பை சிலர் தங்கள் வீடுகளில் வளர்ந்து வரும் சம்பவமும் இந்த உலகில் நடப்பது தான்.
அந்த வகையில் நபர் ஒருவர் வளர்த்துவரும் பாம்பு ஒன்று பல வண்ணங்களில் மிளிரும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்த காட்சி இடம் பெற்றுள்ளது.
அதில், பெரிய மலைப்பாம்பு ஒன்று பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பாம்பு வானவில் போன்ற தோற்றத்துடன் பார்க்கவே பல வண்ணங்களில் மிகவும் அழகாக உள்ளது. அந்த காட்சியை நீங்களே பாருங்க.