மழைக்காலத்தில் தனியாக டூர் போக ஆசையா? அப்போ இந்த இடங்களுக்கு போங்க
தற்போது பெண்கள் தனியாக சுற்றுலா செல்வது வழக்கமாகி வருகிறது.
அப்படி தனியாக பயணம் செய்யும் பொழுது நாம் செல்லும் இடங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
அந்த வகையில், இந்தியாவில் மழைக்காலத்தில் பெண்கள் தனியாக பயணிக்க ஏற்ற இடங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
மூணாறு, கேரளா | மழைக்காலத்தில் மூணாறின் தேயிலைத் தோட்டங்களும் மூடுபனியால் சூழப்பட்ட மலைகளும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இங்கு மழைக்காலங்களில் பெய்யும் லேசான தூறல், பசுமையான நிலப்பரப்புகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் பெண்களை அதிகமாக கவரும். தனிமையில் பயணம் செய்ய பிளான் போடுபவர்கள் இங்கு செல்லலாம். பாதுகாப்பான விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. |
கூர்க், கர்நாடகா | இந்தியாவின் ஸ்காட்லாந்து என கூர்க் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான மலை வாசஸ்தலம் இதுவாகும். பெண்கள் அதிகமாக இங்கு வந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதி முழுவதும் பனி படர்ந்து பசுந்தாவரங்களால் சூழப்பட்டு, அழகான அருவிகளும் தண்ணீரை பொழிய, காபிப் பயிர்கள் செழித்து காணப்படும். இந்த இடத்திற்கு பெண்கள் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பாக இருக்கும். நகரத்தின் பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து வேறுபட்டு அமைதியான சூழலை பார்க்கலாம். |
வாரணாசி, உத்தரப்பிரதேசம் | ஆன்மீக மற்றும் கலாச்சார கலவையாகத் திகழும் இந்த இடத்திற்கு மழைக்காலத்திலும் செல்லலாம். மலைத்தொடர்களுக்கு அருகில் உள்ள அருவிகள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். மழையால் அழகாக காட்சி அளிக்கும் கோயில்கள், அதிகாலை ஒலிக்கும் மந்திரங்கள், மாய கங்கா ஆரத்தி ஆகியன மறக்க முடியாத அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு கொடுக்கிறது. சரியான திட்டமிடுதலுடன் பயணம் செய்யும் பெண்களுக்கு ஆன்மீகத் தேடலில் இறங்கலாம். |
ஷில்லாங், மேகாலயா | கிழக்கின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் இந்த இடத்திற்கு பருவ மழைக்காலத்திலும் பயணம் செய்யலாம். பச்சைப் புல்வெளிகள், நீர்வீழ்ச்சிகள், வசீகரமான காலனித்துவ கட்டிடங்களும் இந்தப் பகுதிக்கு உயிர் கொடுக்கின்றன. மாறாக இங்குள்ள கலாச்சாரத்தையும் இயற்கை அழகையும் ரசிக்க பெண்கள் இங்கே பயணம் செய்து தனித்துவமான அனுபவத்தை தரும். பாதுகாப்பாக இடமாகவும் உள்ளது. |
கோவா | கோவா இயற்கை அழகு நிறைந்த பிரதேசங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இங்கு மழைக்காலத்திலும் செல்லலாம். ஒருவகையான அமைதியுடன் இருக்கும் இந்த இடத்திற்கு பயணிகள் அதிகமாக வருகை தருகிறார்கள். உள்ளூரில் சுற்றிப் பார்க்கவும் ஏற்றது மழைக்காலம் தான். பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் இங்கு யோகா ஓய்வு விடுதிகள், அழகான ரிசார்ட்டுகள் உள்ளன. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |