ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்!
ஜோதிட கணிப்புகளில் கிரக நிலைகளின் பங்கானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரங்களின் பெயர்ச்சி மற்றும் முக்கிய கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்கள் 12 ராசிகளிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
அந்தவகையில், தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி ராகு சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும், கேது மகம் நட்சத்திரத்திற்கும் இடம்பெயர்வதால், குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் பல்வேறு வகையிலும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப்போகின்றது.
அப்படி பெருமளவில் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிகார்களின் வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்படப்போகின்றது. குறிப்பாக எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும்.
தொழில் விடயங்களில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார ரீதியில் உச்ச பலனை அனுபவிக்கப்போகின்றார்கள்.
நீண்ட காலமாக பணியிடத்தில் சன ஊழியவர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலை சீராக இருக்கும்.
வியாபாரிகள் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்துவதற்கான யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் ராகு கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் பொருளாதார ரீதியில் சிறப்பான பலன்களை அனுபவிக்ப்போகின்றார்கள்.
கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.குடும்ப சூழலில் இருந்துவந்த குழப்பங்கள் நிவர்த்தியாகும்.
சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காணும் யோகம் உண்டும். இந்த காலகட்டத்தில் பணவரவு திருப்பதிகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |