ராகு, கேதுவின் அரிய சேர்க்கை... 4 ராசிகளுக்கு இனி பொற்காலம் தானாம்
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியில் இதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.
ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்கு மாறி இந்தக் கிரக அமைப்பை உடைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். ராகு மற்றும் கேது எப்போதும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி இடைவெளியில் அமைந்திருக்கும். தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். அனைத்து முக்கிய கிரகங்களும் இவற்றுக்கு இடைப்பட்டப் பகுதிக்குள் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலை என்று குறிப்பிடப்படுகிறது.
ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்குள் நுழையும்போது இந்த அமைப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிதான கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் தகவல் தொடர்பு இடைவெளிகள், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். இந்த கிரக அமைப்பால் மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த அரிய கிரக சேர்க்கையால் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். வாக்குவாதங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம், எனவே வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் திருமணத்தில் அமைதியைப் பேண உங்கள் துணையிடம் அன்பையும் பச்சாதாபத்தையும் காட்டுங்கள், இல்லையெனில் தற்காலிக பிரிவு ஏற்படலாம். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அனைத்தையும் விட மிக முக்கியம்.

சிம்மம்
கேது தற்போது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முடிவெடுப்பதில் நிச்சயமற்ற தன்மையை அனுபவிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.
அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கும்பம்
ராகு தற்போது கும்ப ராசியில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் சார்ந்த முடிவுகள் மற்றும் பணியிட உறவுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அழுத்தம் அதிகரிப்பதால் அவர்கள் வேலையில் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும். நிலை மோசமாகும் போது, அவர்கள் வேலையை இழக்கக் கூட வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களின் தற்போதைய வேலையில் அதிருப்தியை சந்திக்கலாம், இதன் விளைவாக, அவர்கள் வேலையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.
புதிய வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கலாம். இருப்பினும், கும்ப ராசிக்காரர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இருக்காது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் ஏமாற்றங்களை சந்திக்கலாம், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உங்கள் நட்பை அல்லது இரக்கக் குணத்தை தவறாக பயன்படுத்தலாம். இதன் விளைவாக அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |