சரத்குமாரை ஓங்கி அறைய நினைத்த ராதிகா... முதல் சந்திப்பே இப்படியா?
நடிகை ராதிகா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை ராதிகா
தமிழ் சினிமாவில் 80 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த ராதிகா சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் தனது குடும்பத்தினரைக் குறித்து பேசியுள்ளார்.
இன்று ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் இன்று தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராதிக சமீபத்தில் நடைபெற்ற விருதுவிழாவில் பேசிய விடயம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த நிகழ்வில் சிறந்த அம்மாவிற்கான விருதை ராதிகாவிற்கு தனது மகள் ரயான் வழங்கியுள்ளார். அப்பொழுது கணவர், குழந்தைகளைப் பற்றி பேசியுள்ளார்.
சரத்குமாரை அடிக்க நினைத்தாரா?
ராதிகா பேசுகையில், சரத்குமாரை முதன்முதலில் பார்க்கும் போது ஓங்கி அறையனும்னு தோணுச்சி, ஏன் என்றால் அவர் ஒரு மொக்க ஜோக் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே இருந்தார்.
நான் மட்டும் சிரிக்காமல் இருந்ததுடன், இதைவிட நல்ல ஜோக் உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டேன்... அந்த பழக்கம் மட்டும் இப்போது வரைக்கும் மாறவே இல்லை.
தனது மகன் விடயத்தில் தான் ஏதாவது கூறி சென்றால், உடனே நான் பேசிக்கிறேன் என்று சரத் உடனே சொல்லிவிடுவார். ரயானை தனியாக வளர்த்த எனக்கு பையனை வளர்க்க சரத்குமார் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |