சாணக்கிய நீதி : இந்த குணம் கொண்ட பெண்கள் புகுந்த வீட்டை சொர்க்கமாக மாற்றுவார்களாம்!
சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் சிந்தனையாளர் ஆவார். அவர் தனது அனுபவங்களையும் அறிவையும் சாணக்கிய நீதி என்ற நூலில் தொகுத்துள்ளார்.
அந்த நூலில் வாழ்க்கை ஒழுக்கம், சமூகம், ஆட்சி, வெளியுறவுக் கொள்கை மற்றும் ராணுவ உத்திகள் போன்ற பல விஷயங்கள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்துகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், இன்றைய காலத்திலும் பயனுள்ளதாகக் கருதப்படுகின்றன.இன்றும் சாணக்கியரின் கருத்துக்களை ஏராளமானோர் பின்பற்றுகின்றார்கள் என்றால் மிகையாகாது.
குறிப்பாக, சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட கருத்துக்களின் பிரகாரம் திருமணத்திற்குப் பிறகு ஒரு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நல்ல முறையிலும் நடத்த உதவும் பெண்களின் நான்கு முக்கிய பண்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிறந்த மனைவிக்கான குணங்கள்
கணவரின் சாதனைகளை மதிப்பது
சாணக்கிய நீதியின் பிரகாரம் ஒரு நல்ல மனைவி, தனது கணவரின் முயற்சிகள் மற்றும் சாதனைகளைப் பார்த்து பெருமை கொள்வார்.
அதே நேரத்தில், அவரது செயல்களில் ஏதேனும் தவறுகள் அல்லது குறைகள் இருப்பதை கவனித்தால், அதை குறை கூறாமல் ஒரு நல்ல தோழியைப் போல எடுத்துரைத்து, அவற்றைச் சரிசெய்ய ஊக்குவிப்பார்.
இத்தகைய ஆதரவும் புரிதலும் கொண்ட பெண்ணே உண்மையான நற்பண்புகள் நிறைந்த மனைவி என்று சாணக்கியர் கூறுகிறார்.
திருமணத்திற்குப் பிறகு அவர் நுழையும் இல்லத்தை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த இடமாக மாற்றும் திறன் அவருக்கு இருக்கும்.

இன்ப, துன்பங்களில் துணையாக இருப்பது
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அதில் ஏற்றத் தாழ்வுகளும் சவால்களும் இயல்பானவை.
நல்ல காலங்களில் பலர் நம்முடன் இருப்பார்கள்; ஆனால் கடினமான சூழ்நிலைகளில் நெருக்கமானவர்கள்கூட விலகிச் செல்லக்கூடும். அத்தகைய நேரங்களில் உறுதுணையாக நின்று ஆதரவு தரும் மனைவி கிடைத்தால், வாழ்க்கையின் சிரமங்களை எளிதாகக் கடந்து செல்ல முடியும்.
சாணக்கியரின் கருத்துப்படி, இத்தகைய குணநலன்கள் கொண்ட பெண் இருக்கும் வீட்டில் பிரச்சினைகள் நீண்ட காலம் நிலைத்திருக்காது. அப்படிப்பட்ட பெண் மருமகளாகச் செல்லும் குடும்பம் உண்மையிலேயே சொர்கம் போல் இருக்கும்.

குணத்துக்கு முக்கியத்தும்
ஒரு மனிதரின் வெளிப்புற அழகையோ செல்வத்தையோ விட, அவரது குணநலன்களையே முக்கியமாகக் கருதும் பெண் உண்மையான வாழ்க்கைத்துணையாக இருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அத்தகைய பெண், காலம் கடந்தாலும் தனது துணையின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் குறையாமல் பாதுகாப்பார்.
ஒருவேளை அவரது கணவர் செல்வம் அல்லது அழகிய தோற்றத்தை இழந்தாலும், அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து ஆதரித்து, முன்னேற ஊக்குவிப்பார்.இத்த குணம் கொண்ட பெண்னை மனைவியாக பெறுவது பெரும் வரம்.

இலட்சியம் கொண்ட பெண்
தேவையற்ற ஆடம்பரங்களிலும் வெளிப்பகட்டிலும் நேரத்தை வீணாக்காமல், வாழ்க்கையில் தெளிவான இலட்சியத்துடன் செயல்படும் பெண்ணே சிறந்த வாழ்க்கைத்துணையாகத் திகழ்வார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அத்தகைய பெண் தனது முயற்சியால் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் காரணமாக இருப்பார்.
இவ்வாறு இலட்சியத்துடனும் பொறுப்புணர்வுடனும் வாழும் மனைவி கிடைத்தால், அந்த இல்லம் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |