ஆன்லைன் வகுப்பில் Zoom செய்து இதையெல்லாம் செய்தேன்: அனைத்து உண்மைகளை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன்
சென்னை பிஎஸ்பிபி தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடைபெற்ற மூன்று நாள் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.
பிஎஸ்பிபி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆசிரியர் ராஜகோபாலன் தவறாக நடந்துகொண்ட நிலையில், மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு பொலிசார், நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற நிலையில், தற்போது விடிய விடிய ராஜகோபாலனிடம் பல கேள்விகளை கேட்டு பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொலிரின் முதற்கட்ட விசாரணையிலையே தன்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன் விசாரணையின் போது மீக சோர்வாகவே காணப்பட்டுள்ளார். அத்துடன் ராஜகோபாலன் தனது செல்போனில் அழித்த ஆதாரங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
அந்த ஆதாரங்களை கொண்டு பொலிசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் ராஜகோபாலன் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்துள்ளார்.
இதையடுத்து 5 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்த பொலிசார் அதற்கு எழுத்துப்பூர்வமாகவே இராஜகோபாலனிடம் பதில் பெற்றுள்ளனர்.
அத்துடன் அவரது மூன்று நாள்நடவடிக்கைகள் மற்றும் வாக்குமூலங்கள் அனைத்தும் வீடியோவாகவுதம் பதிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை zoom செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிகப்படியான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் குற்ற சம்பவத்தில் இருந்து ராஜகோபாலன் தப்பிக்க முடியாது என்று பொலிசார் உறுதியாக தெரிவித்துள்ளனர். மூன்றுநாள் விசாரணை முடிந்துள்ளநிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கவும் பொலிசார் திட்டமிட்டுள்ளது.
அது மட்டுமின்றி பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.