வகுப்பறையிலேயே குடித்துவிட்டு மாணவர்கள் முன் நடனமாடிய ஆசிரியர் - வைரல் வீடியோ
குடிபோதையில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையிலேயே நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள குருநானக் தேவ் கல்லூரியை சேர்ந்த ரவீந்தர் குமார் என்ற பேராசிரியர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார்.
அதன்படி வகுப்பறைக்கு வந்த அவர், மாணவர்கள் அருகே பாட்டிலில் இருந்து மது அருந்திக்கொண்டே நடனமாடியுள்ளார்.
அவர் ஒரு பஞ்சாபி திரைப்படப் பாடலுக்கு நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், தனது சொந்தப் பணத்தில் மது அருந்துவதாகவும், தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறியுள்ளார்.,
இவர் கணித பேராசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அவரை கல்லூரி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உள்ளது.
ஆனால், பேராசிரியர் தான் குடிபோதையில் எதையும் செய்யவில்லை என்றும் வேடிக்கைக்காக செய்தேன் என்றும் கூறியுள்ளார்
Pathankot University Professor in class inspired by CM himself 🫣pic.twitter.com/jzva71lZOS
— Lala 🇮🇳 (@FabulasGuy) September 21, 2022