என் கிட்ட அது இல்லையா? வசியை திருமணம் செய்ய காரணமே வேறு... பிரியங்கா தேஷ்பாண்டே ஓபன் டாக்!
பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே முதல் முறையாக, வசியை திருமணம் செய்து கொண்டது ஏன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே அண்மையில் வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் VJ பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

அதன் பின்னர் பிரியங்கா தேஷ்பாண்டே வசி என்பவரை திடீரென இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட தகவலை வெளியிட்டார். இவர்களின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி நடந்தது.
பிரியங்காவின் வாழ்க்கையின் இந்த புதிய தொடக்கத்திற்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை கூறினாலும், சிலர் பணத்திற்பகாக பிரியங்கா வசியை திருமணம் செய்துக்கொண்டார் என்ற எதிர்மறை விமர்சனங்களையும் இணையத்தில் பரப்பினார்கள்.

பிரியங்கா ஓபன் டாக்
இது குறித்த விமர்சனங்களுக்கு பிரியங்கா சமீபத்தில் ஒரு பேட்டியில் நெத்தியடி பதில் கொடுத்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், " என்னுடைய திருமணம் முடிந்த பிறகு சில யூடியூப்களில், எனது கணவர் தீவு வைத்துள்ளார், ரூ. 200 கோடி சொத்து இருக்கு, அரசியல் குடும்பம் என்றெல்லாம் பல விதமாக கருத்துக்களை முன்வைத்தார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால், என்னுடைய கணவர் வசி ஒரு இலங்கைத் தமிழர், அவர் குடும்பம் லண்டனில் வசித்து வருகிறார்கள். என் கணவரும் அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவ்வளவுதான்.
பணத்துக்காக திருமணம் செய்தேன் என கூறுகிறார்கள். நான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கேன், அந்த பணம் என்னிடம் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், உண்மையான காதல் தான் வசியை திருமணம் செய்ய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |