கணவரிடம் வம்பிழுத்த பிரியங்கா- வசி கொடுத்த ரியாக்ஷன்.. பேசும் பொருளாக மாறிய காட்சி
கணவரை பாசமாக அழைத்த பிரியங்காவை பார்த்து வசிக் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்தது. இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
கணவரை வம்புக்கு இழுக்கும் காட்சி
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தும் பிரியங்கா கணவருடன் செய்யும் அலப்பறைகளை காணொளிகளாக பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கணவருடன் காரில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, கணவரை “கோபால் கோபால்...” என அழைக்கிறார். அதற்கு வசி எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் காரை ஓட்டுகிறார்.
கணவரின் ரியாக்ஷனை எதிர்பார்த்த பிரியங்காவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளை கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |