ஆட்டத்தை ஆரம்பித்த ஜனனி- வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார்- கைது செய்வார்களா?
மணி விழா ஆரம்பிக்கும் நேரத்தில் குணசேகரன் வீட்டிற்குள் பொலிஸார் நுழைந்து பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
இந்த சீரியலில் பெண்கள் வீட்டுக்குள் அனுபவிக்கும் கொடுமைகளை கருவாகக் கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகிறது.
படித்த பெண்களை திருமணம் செய்து அவர்களை அடிமையாக வைத்து நடத்துவது தான் குணசேகரனின் வேலையாக உள்ளது. ஆனால் கடைசியாக குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜனனி குணசேகரனின் எண்ணங்களை முறியடித்து பெண்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
குணசேகரனுக்கு மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டு வருகிறது. சக்தி, குந்தவையிடம் கடன் வாங்கி சீர் செய்ய தேவையான அனைத்தையும் வாங்கி விட்டார். ஆனால் இந்த விஷயம் எதுவும் ஜனனிக்கு தெரியாது.
மாறாக, ஆதிரை திருமணம் விடயத்தில் கலாட்டா செய்த ஜான்சி ராணி மொத்தமாக மாறி காவி உடையில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
மணி விழாவுக்கு வராத ஈஸ்வரி
இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் மணி விழாவுக்கு கிளம்பி விட்டார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் கிளம்பாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.
இப்படி சம்பவம் வீட்டுக்குள் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது மெதுவாக குணசேகரன் சக்தியிடம், “விழா நன்றாக நடக்குமா? உன்னுடைய மனைவி நினைத்தால் தான் பயமாக இருக்கிறது..” என கிளப்பி விடுகிறார். ஆனாலும் சக்தி, “அப்படியெல்லாம் இல்ல அண்ணே..” என சமாதானம் செய்து அழைக்கிறார்.
மணி விழாவுக்கு காலையில் எழுந்து அனைவரும் ஆயத்தமாக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி மாத்திரம் அப்படியே அமர்ந்திருக்கிறார்.
வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார்
இது ஒரு புறம் இருக்கையில், மணி விழா ஆரம்பிக்கும் நேரத்தில், பொலிஸார் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
இதனை பார்த்த விசாலாட்சி உட்பட அனைவரும், “என்ன ஜனனி செய்த..” என ஜனனியை கேள்வி கேட்கிறார்கள். சக்திக்கும் இது அதிர்ச்சியாக இருக்கிறது. குணசேகரன் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கிறார். பொலிஸ் எதற்காக உள்ளே வந்தது என்பதனை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |