அடிக்கடி கனவில் வந்த பூசாரி செய்த காரியம்... இளம்பெண் குற்றச்சாட்டினால் அதிர்ந்த பொலிசார்
பெண் ஒருவர் தனது கனவில் சாமியார் வந்து தன்னை பலாத்காரம் செய்துள்ளதாக முதன்முறையாக பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் பிரபலமானவர் பிரசாந்த் சதுர்வேதி பூசாரி. இவர் தனது கனவில் அடிக்கடி வந்து வன்கொடுமை செய்வதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது மகன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பூசாரியிடம் அழைத்து சென்றிருந்தேன். சில மந்திரங்களையும் சொல்லிவரசொல்லி, சில சடங்களையும் செய்யச்சொல்லி சொன்னார். அதன்படியே செய்துவந்தேன்.
ஆனால், அப்படி இருந்தும் என் மகன் 15 நாளில் இறந்துவிட்டான். நீங்க சொன்னபடிதானே செய்தேன். அப்படி இருந்தும் அவன் எப்படி இறந்தான் என்று பூசாரியிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என்றும் எழுத்து பூர்வமாக பொலிசில் அளித்துள்ள புகாரில் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, பிரசாந்த் சதுர்வேதியிடம் சென்று பொலிசார் விசாரிக்கையில், குறித்த பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
பின்பு எப்படி அந்த பெண் கனவில் அடிக்கடி நீங்கள் வருவதாக கூறுகிறார்? என்று கேட்டதற்கு, பூசாரி அதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார்.
பிரசாந்த் சதுர்வேதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால், பெண்ணிடம் சமாதானம் பேசி பொலிசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.