தோசை மாவு புளிக்காமல் இருக்கணுமா? இதை செய்தால் 1 வாரம் என்றாலும் அப்படியே இருக்கும்
காலை உணவு தயாரிப்பதற்காக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வீட்டில் மாவு அரைத்து சேமிப்பது வழக்கம். இதை புளிக்காமல் சேமித்து வைக்க சில டிப்ஸ்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
இது பற்றி யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை. இந்த பதிவில் எப்படி தாவு நீண்ட நாட்களுக்கு புளிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தோசை மாவு புளிக்காமல் இருக்க டிப்ஸ்
பொதுவாக தமிழர்களின் பாரம்பரிய காலை உணவில் இட்லி,தோசை இல்லாமல் இருக்காது. அதிலும் சிலர் இட்லியை தவிர்த்தாலும் தோசை எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடுவார்கள்.
இதற்காக வீட்டில் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை அரைத்து சேமித்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த மாவை முறையாக சேமித்து வைக்கவில்லை என்றால், விரைவில் மாவு புளித்துவிடும்.
தோசை மாவு எந்த காரணத்தினால் புளித்தாலும் அதில் முக்கியமானது ஸ்டார்ச், தண்ணீர் உள்ளிட்டவை பாக்டீரியாவின் வளர்ச்சிக்கான சிறந்த கலவையாக உள்ளது.
இந்த பாக்டீரியாக்கள் மாவில் உள்ள சர்க்கரையை உடைத்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. இதுவே முக்கிய காரணமும் கூட.
பழைய மாவுடன் புதிய மாவை ஒருபோதும் கலக்க கூடாது. இதனால் மாவு விரைவில் புளிந்துப்போகும் வாய்ப்பு உள்ளது. இத தவிர மாவை அடிக்கடி கிளற கூடாது. இதனால் அதில் உள்ள காற்று அதிகரித்து பாக்டீரியா வளர்ச்சி உண்டாகும்.
ஆகையால் இதை தவிர்ப்பது நல்லது. தோசை, இட்லி மாவை அரைத்த பின் அதை அப்படியே கலக்காமல் வைக்க வேண்டும். இவ்வாறு, மாவு புளிக்காமல் இருக்க பல வழிகள் உள்ளன.
இதை விடவும் நல்ல டிப்ஸ் உள்ளது. நீங்கள் மாவு அரைத்தவுடன் அதில் கை கலக்காமல் அதை எடுத்து சுத்தமான குளிரூட்டியில் வைத்தால் அரைத்த மாவு வாரம் என்ன மாதம் என்றாலும் அப்படியே இருக்கும். இதற்கு மிகவும் முக்கியமாக குளிரூட்டி சுத்தமாக இருப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |