கமல் முன்பு பிக் பாஸ் டைட்டில் வின்னரை அறிவித்த பூர்ணிமா... அதிர்ந்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டி புறப்பட்டுச் சென்ற பூர்ணிமா அர்ச்சனாவை டைட்டில் வின்னர் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 91 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன் என 16 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 91 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பணப்பெட்டியினை பூர்ணிமா எடுத்துச் சென்ற நிலையில் கமல்ஹாசன் இன்று அவரை அழைத்துள்ளார்.
அவர் மற்ற போட்டியாளர்களைக் குறித்து பேசுகையில் அர்ச்சனாவை டைட்டில் வின்னர் என்று கமல்ஹாசன் முன்பு கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |