கணவருக்காக சாப்பிடாமல் விரதம் இருந்த பூனம் பாண்டேவிற்கா இந்த நிலை? வைரலாகும் காணொளி
கட்டிய கணவர் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வட இந்திய மனைவிமார்கள் எடுக்கும் 'கர்வா சவுத்' விரதத்தை சமீபத்தில் நடிகை பூனம் பாண்டே எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் ஆன உடனே 7 ஜென்மங்கள் உன்னோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி விட்டு கணவர் அடித்ததாக புகார் அளித்த பூனம் பாண்டேவுக்கு மீண்டும் அதே போல ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
கணவர் நல்லா இருக்க வேண்டும் என கர்வா சவுத் விரதத்தை சமீபத்தில் எடுத்த கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை அவருடைய கணவர் சாம் பாம்பே பயங்கரமாக அடித்து துன்புறுத்தி உள்ளார். இந்த சண்டையில் கண், தலை மற்றும் முகத்தில் பூனம் பாண்டேவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கணவர் தாக்கிய நிலையில், போலீசாரிடம் புகார் அளித்து விட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார் பூனம் பாண்டே. மனைவியை அடித்து துன்புறுத்திய சாம் பாம்பேவை போலீசார் கைது செய்து இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏன் இப்படி மிருகத்தனமாக தாக்கினீர்கள் என விசாரித்து வருகின்றனர்.