கேன்ஸ் பட விழாவில் ஆடையில்லாமல் தவித்த நடிகை பூஜா ஹெக்டே - சாப்பிட முடியாமல் தவித்த பரிதாப நிலை!
தமிழ் சினிமாவில், முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பூஜா ஹெக்டே. இந்த படத்தின் தோல்வியால், தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கு கொடிக்கட்டி பறந்துள்ளார்.
இதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் பூஜா ஹெக்டே. இதுதவிர தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், பிரான்ஸில் நடைப்பெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்துகொண்டுள்ளார். அங்கு அவர், கவர்ச்சி உடையில் கலந்துகொண்ட அவர், திரைப்பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார்.
லட்சகணக்கான பொருட்கள் திருட்டு
இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பூஜா ஹெக்டே தனது சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்தால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது எனவும், இதனால் பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிகிறது.
தொடர்ந்து, பூஜாஹெடேவும் காலை மதியம் சாப்பிடாமல் இனி பெட்டிக் கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்து நொந்து போனதால் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு இரவு தான் சாப்பிட்டுள்ளார்.
செருப்பின் விலை
விழாவில் மாற்று உடை கூட இல்லாமல் இருந்துள்ளார். இருந்தாலும் தங்க வைர நகைகளை அவர் சூட்கேஸில் வைக்காமல் கழுத்தில் அணிந்து இருந்ததால் அவை திருடு போகாமல் தப்பித்தது.
அவர் அணிந்திருந்த செருப்பின் விலை மட்டுமே ரூ.43 லட்சம் மதிப்புடையது என கூறப்படுகிறது.