பொன்னியின் செல்வனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்! இந்த ஒரு சீன் எப்படி வந்தது? தீயாய் பரவும் காட்சி
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது.
நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
2500 பக்கங்கள் கொண்ட ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகமாக படம் எடுப்பது என்பது சவாலான ஒன்று. இதை தற்போது மணிரத்தினம் சாதித்து காட்டியிருக்கிறார்.
பொன்னின் செல்வன் book readers preparing for reviews ryt now..🤗 pic.twitter.com/N1UAcppmf9
— black cat (tribal) (@Cat__offi) September 27, 2022
பொன்னியின் சென்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்திய தேவன் மூவருமே ஒரு காட்சியில் வருவது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்த ரசிகர்கள் மூவருமே ஒரே காட்சியில் வருவது எப்படி சாத்தியம்? பொன்னியின் செல்வன் கதையில் மூவருமே சேர்ந்தது போல் ஒரு காட்சியில் கூட இல்லை.
ஆதித்ய கரிகாலன் காஞ்சிபுரத்தை ஆண்டபோது அவருடைய தம்பி அருள்மொழி வர்மனும், தங்கை குந்தவியும் வேறு ஒரு இடத்தில் இருந்தார்கள்.
Vibing to this everyday..💥 @arrahman 🙇#PonniyinSelvan #PonniyinSelvan1 pic.twitter.com/paPvoAARS5
— Uneedtocalmdown (@tharanginii) September 29, 2022
வச்சி செய்யும் நெட்டிசன்கள்
ஆதித்ய கரிகாலன் இறந்த பிறகு தான் அருள்மொழிவர்மன், குந்தவை வருகிறார்கள். அப்போது கூட வந்திய தேவன் அங்கு இல்லை. ஆரம்பத்தில் ஆதித்ய கரிகாலனுடன் வந்திய தேவன் இருக்கிறார்.
ஆனால், அருள்மொழி வரும் காட்சிகள் எதுவும் இல்லை. அதே போல் நந்தினி- அருள் மொழி வர்மன் வரும் காட்சிகளும் கதையில் இல்லை.
இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேள்விகளை எழுப்பி வந்தனர். இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் வாசர்களை நெட்சன்கள் சிலர் வச்சி செய்து வருகின்றனர்.