வீரலட்சுமிக்கு ஆபாச படம் அனுப்பியவர்கள் கைது! அவரே வெளியிட்ட அதிர்ச்சி காரணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழர் முனேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய மர்ம ஆசாமியை திட்டி வீடியோ வெளியிட்ட சம்பவம் வைரலாகி வந்தது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக ஏற்கனவே கொடுத்த புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நிலையில், கடந்த வாரத்தில் கையில் அரிவாளுடன் மர்ம நபர்களை எச்சரித்து வீடியோ பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவில், நீயாக சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துவிடு, இல்லையேல் நானே கண்டுபிடித்தால் மர்ம உறுப்பை அரிவாளால் அறுத்துவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து 19 ஆம் தேதி புகார் மனு வழங்கினார்.
இந்த நிலையில், வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோவை அனுப்பிய மர்ம ஆசாமி காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை பல்லாவரம் பம்மல் எஸ். 6 காவல்துறை அதிகாரிகள், தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமிக்கு ஆபாச விடியோவை அனுப்பியவரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீரலட்சுமி பதிவு செய்த முகநூல் பதிவில், " நான் வன்னியர் பெண் என்பதாலும் எந்நேரமும் நான் திருநீரு பொட்டு வைப்பதும் என்னுடைய வீரலட்சுமி என்ற பெயரும் தான் அவர்களுக்கு வெருப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இதனாலேயே, அவர்கள் ஆபாச படங்களை அனுப்பியுள்ளனர். அவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான தனிப்பட்ட முன்பகை போன்றவை கிடையாது. நான் எந்த மதத்தையும், சமூகத்தையும் இதுவரைக்கும் வெறுக்கத்தக்க அல்லது அவதூறு செய்யும் வகையில் பேசியதில்லை " என்று தெரிவித்து இருந்தார்.