Neeya Naana: அரங்கத்தில் பாடப்பட்ட தாலாட்டு... குழந்தைகளுடன் போராடும் இளம் தாய்மார்கள்
நீயா நானா நிகழ்ச்சியில் தாலாட்டு பாடும் முந்தைய தலைமுறை பெண்கள் மற்றும் தாலாட்டு பாடத் தெரியாத இளம் தாய்மார் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த தாலாட்டு பாடும் முந்தைய தலைமுறை பெண்கள் மற்றும் தாலாட்டு பாடத் தெரியாத இளம் தாய்மார் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

பொதுவாக குழந்தைகளை தூங்க வைப்பதற்கு முந்தைய காலத்தில் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் இன்றைய குழந்தைகளை தூங்க வைப்பதற்கு இளம் அம்மாக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நேரம் விளையாட்டு நேரம் அல்ல... தூங்குவதற்கான நேரம் என்று குழந்தைகளுக்கு தெரியாமல் இருப்பதால் சிரமப்படுவதாக தாய்மார்கள் கூறுகின்றனர்.
அதே நேரம் மற்றொரு புறம் இருக்கும் முந்தைய தலைமுறையினர் தாலாட்டு பாடினால் குழந்தைகள் எவ்வாறு தூங்கும் என்ற தனது அனுபவத்தினை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
ஆனாலும் இன்றைய காலத்து தாய்மார்களுக்கு குழந்தைகளை கையாள்வதில் சிரமத்தையும், தூங்க வைப்பதில் கூட பல கஷ்டத்தினையும் சந்தித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |