உயிரை காப்பாற்றிய நபருக்காக 5000 மைல் தனியாக வந்த பென்குயின்! வியப்பூட்டும் உண்மை சம்பவம்
சமீபகாலமாக தனியான பாதையை தெரிவு செய்து உயிர் துறந்த பென்குயின் தான் சமூகவலைத்தளக்கங்களை ஆக்கிரமித்து வருகின்றது. இது பற்றி அனைவருக்குமே தெரிந்திருக்கும்.
ஆனால், உயிரை காப்பாற்றிய முதியவரை பார்பதற்காக ஆண்டுதோறும் 5000 மைல் பயணம் செய்து வந்த வியப்பிவூட்டும் விடயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் கேட்பதற்கு சற்று சினிமா பாணியில் இருந்தாலும் இந்த சம்பவம் முற்றிலும் உண்மையானது.

நெகிழ வைத்த பென்குயின்
பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராதத்தை சேர்ந்தவர் தான் ஜூவா பெரேரா டி சாவுசா.இவர் தனது கிராமத்துக்கு அருகில் உள்ள கடலில் மீன் பிடிப்பதை பொழுப்போக்காக கொண்டவர்.

அப்படியொரு நாள் 2011 ஆம் ஆண்டு குறித்த முதியவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயத்தில், பாறையில் மோதுண்டு ஆபத்தான நிலையில் இருந்து ஒரு பென்குயினை காப்பாற்றி அதற்கு சிகிச்சையளித்து அந்த பென்குயினுக்கு டிண்டிம் என பெயரும் வைத்துள்ளார்.
பின்னர் சிறுது நாட்கள் பராமரித்து குறித்த பென்குயின் குணமடைந்ததன் பின்னர் அதனை கடலில் சென்று விட்டுள்ளார்.

ஆனால் சில மாதங்கள் கழித்து இந்த பென்குயின் மீண்டும் அந்த முதியவரை பார்க்க வந்துள்ளது. அது ஏதோ தற்செயல் என கருதிய அவர் அந்த பென்குயினை பார்த்தவும் இன்ப அதிர்ச்சியடைந்து அதனை முத்தமிட்டு கொஞ்சியுள்ளார்.
ஆனால் குறித்த பென்குயின் அந்த முதியவரை மீண்டும் பார்ப்பதற்காகவே 5000 மைல்கள் கடந்து வந்துள்ளது. ஒரு தடவை மாத்திரமன்றி நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அந்த பென்குயின் ஜூவாவை பார்க்க வந்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |