பேடிஎம்-மின் அசத்தலான புதிய வசதி - பணமே கட்டாமல் ரயில் டிக்கெட் புக் செய்யலாமாம்!
டிஜிட்டல் சேவையில் முன்னணி நிறுவனமான பேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புதுசாக அட்டகாசமான ஆஃபர்களை வழங்கி வருகிறது.
இதற்கு முன்பேடிஎம் தளத்தில் சிலிண்டர் புக் செய்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டதுடன், அதை இலவசமாக பெற்றுக் கொள்வதற்கான கூப்பன் கோடு மற்றும் டிஸ்கவுண்ட் ஆகியவை வழங்கப்பட்டிருந்தன.
அந்த வகையில், ரயில் டிக்கெட் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்காக பேடிஎம் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது (Buy Now Pay Later) என்ற சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் கைவசம் பணம் இல்லாவிட்டாலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.அதற்குப் பிறகு வேறொரு சமயத்தில் இந்தக் கட்டணத்தை திருப்பி செலுத்தினால் போதுமாம்.
இதுமட்டுமின்றி டிக்கெட் முன்பதிவு, யுடிலிட்டி பில்ஸ் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கும் கூட இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும், சில்லறை விற்பனை கடைகள் முதல் ஆன்லைன் தளங்கள் வரையில் எண்ணற்ற இடங்களில் பொருட்களை வாங்கவும், சேவைகளை பெறவும் இந்த சலுகையை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திடீரென்று முடியை வெட்டிய சினேகன் மனைவி! அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே?
பேடிஎம் போஸ்ட்பெய்டு என்றால் என்ன?
இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் கால அளவில் ரூ.60,000 வரை வட்டியில்லா கடன் பெற முடியும்.
அதை அனைத்து ஆர்டர்களையும் ஒரேயொரு மாத பில் மூலமாக கணக்கீடு செய்து, மாத இறுதியில் பணம் செலுத்திக் கொள்ளலாம்.
ஒரே தவணையில் பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஈஎம்ஐ முறையில் பணம் செலுத்திக் கொள்ளவும் முடியுமாம்.
ஐஆர்சிடிசி முன்பதிவு
இதற்கு முதலில் ஐஆர்சிடிசி தளம் அல்லது உங்கள் ஃபோனில் பேடிஎம் ஆப் செல்லவும். பயண விவரங்களை குறிப்பிட்டு, டிக்கெட் முன்பதிவு பக்கத்திற்கு செல்லவும்.
அடுத்து பேமெண்ட் செக்சனில் ‘pay later’ என்ற வசதியை தேர்வு செய்யவும். பேடிஎம் போஸ்ட்பெய்டு வசதியை கிளிக் செய்து, லாகின் செய்யவும்.
இப்போது ஓடிபி கொடுத்து விட்டால், டிக்கெட் முன்பதிவு ஆகிவிடும்.