சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பாவனி... காட்டிக்கொடுத்த ஒற்றை புகைப்படம்
நடிகை பாவனி ரெட்டி சின்னத்திரையில் மீண்டும் களமிறங்க உள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
நடிகை பாவனி ரெட்டி
தமிழ் சின்னத்திரையில் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் பாவனி. ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி, தவனை முறை வாழ்க்கை என்ற தொடர்களின் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின்பு தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட நிலையில், மனவருத்தத்தில் நடிப்பிலிருந்து விலகி இருந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமானார்.
இவர் பிக் பாஸில் கலந்து கொண்ட போது, அதில் போட்டியாளரான வந்த நடன கலைஞர் அமீர் இவரை காதலித்து வந்தார். அவரது காதலுக்கு பச்சைக்கொடி காட்டாமல் இருந்த இவர், பின்பு வெளியே வந்து பச்சைக்கொடி காட்டினார்.
மீண்டும் சீரியலில் பாவனி
இந்த காதல் ஜோடி விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்கள். அண்மையில் இருவரும் சேர்ந்து ஒரு சூப்பரான காரையும் வாங்கியுள்ளனர்.
தற்போது புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளது போன்று பாவனி ரெட்டி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பிக்பாஸிற்கு பின்பு நடிக்காமல் இருந்த இவர் தற்போது சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சீரியல் என்ன என்ற விபரம் எதுவும் வெளிவராத நிலையில், புகைப்படம் மட்டும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |