நடுவானில் திடீரென மயக்கமடைந்த பைலட் - துணிச்சலுடன் விமானத்தை இயக்கிய பயணி!
நடுவானில் பறந்தவிமானம் ஒன்றில் பைலட் மயங்கியதால், அனுபவம் இல்லாத பயணி விமானத்தை இயக்கிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
வட அமெரிக்காவில், அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாட்டின் பஹாமா. இங்கிருந்து 2 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா நகருக்கு சென்றுள்ளது.
நடுவானில் பறந்த விமானம் திடீரென பைலட்டுக்கு உடல் நலக்குறைவால் மயக்கமடைந்துள்ளார். இதைக்கண்ட பயணி ஒருவர் விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் பேசி விபரம் தெரிவித்தார்.
தொடர்ந்து, கட்டுப்பாடு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளைக் கூறினார். அவரை வைத்தே விமானத்தை இயக்கினார்.
இதன்பின்னர், முன் அனுபவமே இல்லாத அந்த பயணி துணிச்சலுடன் விமானத்தை இயக்கி, பத்திரமாக தரையிறக்கினார்.
தளபதி விஜய்யின் நிறைவேறாத ஆசை.. மகன் சஞ்சய் செய்வாரா? என்ன தெரியுமா?
மேலும், விசாரணையில், புளோரிடாவில் வசிக்கும் தன் கர்ப்பிணி மனைவியைப் பார்ப்பதற்காக சிறிய ரக விமானத்தில் அந்தப் பயணி பயணம் செய்துள்ளது தெரியவந்ததுள்ளது.
இதனிடையே, விமானி எவ்வித பதட்டமும் இன்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததுடன், அவர்களின் அறிவுரையைக்கேட்டு பத்திரமாக தரையிறக்கிய பயணிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.