வாயில் புரோட்டாவை வைத்தவாறு உயிரிழந்த நபர்: காரணம் என்ன?
புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், வேலை நிமிர்த்தமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூருக்கு சென்றுள்ளார்.
மாலையில் பேருந்து நிலைய வளாகத்தில் அமர்ந்து பார்சல் வாங்கி வந்த புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருள்ளார்.
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. வாயில் வைத்த புரோட்டாவோடு அவரது உயிர் பிரிந்தது. தற்போது உடலைக் கைப்பற்றிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.