Neeya Naana: அரங்கத்தில் உடையும் பெற்றோரின் காதல் கதை... வெட்கத்தில் மூழ்கிய தருணம்
நீயா நானா நிகழ்ச்சியில் காதலை எதிர்க்கும் காதல் திருமணம் செய்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் காதலை எதிர்க்கும் காதல் திருமணம் செய்த பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.

இதில் பிள்ளைகளின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தான் எவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட கதையை பிள்ளைகளிடம் அவ்வப்போது கூறியுள்ளனர்.
இங்கும் அவ்வாறு அவர்கள் கூறிய காதல் கதைகள் இன்று அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
காதல் திருமணம் செய்த பெற்றோர்களின் கதையினை அரங்கத்தில் பிள்ளைகள் போட்டு உடைத்துள்ளனர். இதில் பெற்றோர்கள் வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டு சிரிப்பை அடக்க முடியாமல் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |