பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட திடீர் பதிவு! கடும் குழப்பத்தில் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது சில தினங்களாக கதிர் வெளியூருக்கு சென்று இருப்பது போன்று அவர் இல்லாத காட்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. இதை பார்த்த பலரும் "கதிர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் இந்த முடிவு எடுத்துள்ளார்" என்று செய்திகள் வெளியிட்டு வந்தனர். சித்ரா மறைந்த பிறகு குமரனும் இப்படி விலகி விட்டாரே என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அந்த செய்திகள் எல்லாம் உண்மையற்றவை என்று அவர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நீங்கள் அனைவரும் நிகழ்ச்சியை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன், நன்றாக நான் செய்தேன்.
நானே இந்த நிகழ்ச்சியின் சிறந்த பார்வையாளனாக இருந்து, நிகழ்ச்சி முழுவதும் சிரித்துக் கொண்டே இருந்தேன். மேலும் நீங்கள் பார்த்தது தான் நிகழ்ச்சி. அதற்கு மேல் எதுவும் இல்லை. குறைவாகவும் எதுவும் இல்லை. எதுவும் வெட்டப்படவில்லை அல்லது சேர்க்கப்படவில்லை.
வெற்றி அல்லது வெற்றி இல்லை என்பதை தாண்டி நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அதே வழியில் நீங்கள் அனைவரும் நீங்கள் பார்த்தவற்றுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இப்போது, நாம் அனைவரும் அடுத்ததில் கவனம் செலுத்துவோம்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு எதெற்கென்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.