மீண்டும் வேலையை காட்டிய சுகன்யா.. பிரிந்து போன பாண்டியன் குடும்பம்- எச்சரித்த மீனா
சுகன்யா பார்த்த வேலையால் சந்தோஷமாக கூடிய பாண்டியன் குடும்பம் பிரிந்து போயுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணான அரசியை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் காதலிப்பது போன்று நடிக்கிறார். அந்த பெண்ணுக்கு விடயம் தெரியாமல் காதலிக்கிறார்.
கடைசியாக அரசியின் திருமணத்தை நிறுத்தி, பாண்டியனின் மானத்தை வாங்கி விட்டார். அதற்கெல்லாம் டுவிஸ்ட் கொடுக்கும் வகையில், அரசி தாலியுடன் வந்து குமாரவேலை நடுங்க நடுங்க வைத்தார்.
குடும்பத்தை பிரித்த சுகன்யா
இந்த நிலையில், பாண்டியனுக்கு அனைத்து உண்மைகளும் தெரியவந்த காரணத்தினால் தன்னுடைய பெண்ணை அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார். காதலுக்கு துணையாக நின்ற சுகன்யாவுக்கும் கோமதி தர்ம அடிக் கொடுத்து கண்டித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு பின்னர், அமைதியாக இருந்த சுகன்யா மீனா வீட்டில் இருந்து வரும் பொழுது பாண்டியன் பணம் கொடுக்காத உண்மை போட்டு உடைக்கிறார். மீனாவால் கடுப்பான குடும்பத்தினர் “இனி உறவு வேண்டாம்..” என பாண்டியன் வீட்டை விட்டு சென்று விடுகிறார்கள்.
திருமணத்திற்கு பின்னர் குடும்பம் சேரும் வேளையில் சுகன்யா பார்த்த வேலையால் மீனா கடும் கோபத்துடன், “ இனி எங்க குடும்ப விடயத்தில் தலை போடாதீங்க..” என எச்சரிக்கிறார். அனைத்தையும் செய்த சுகன்யா சிறு புன்னகையுடன் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
