கொலை வழக்கில் கைதாகும் ஜீவா: நிலை தடுமாறும் மீனா... எதிர்பாராத புதிய திருப்பத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகும் கதிர் மற்றும் ஜீவா தொலைகாட்சி வெளியிட்ட அதிரடியான ப்ரோமோ காட்சி.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
கைதாகும் ஜீவா
இந்நிலையில், சிலகாலமாக வெறும் பிரச்சினைகளா வந்துக் கொண்டிருந்த இவர்களின் குடும்பத்தில் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துக் கொண்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு பெரிய பிரச்சினை வெடித்துள்ளது.
ஜீவாவிற்கும் மீனாவின் அப்பாவிற்கும் சில காலமாக கருத்து முரண்பாடுகள் பல ஏற்பட்டிருந்த நிலையில், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மீனாவின் தங்கை கணவர் பிரசாந்த் தன் மாமானாரை கொலை செய்திருக்கிறார்.
இவர் கொலை செய்து விட்டு அந்த பலியைத் தூக்கி ஜீவாவின் மேல் போட அவர் மாமனாரை கொலை செய்த குற்றத்திற்காக கைதாகின்றார். இதனால் நிலைக் குலைந்து போய் நின்கிறார் மீனா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |