சீரியலை இனி இழுக்க மாட்டாங்க: சுஜாவின் பதிவால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு ஹைதராபாத்தை காலி செய்துவிட்டு குன்னக்குடிக்கு வந்துவிட்டதாக நடிகை சுஜிதா தனுஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் வேதனை அடைந்த நிலையில், சமீபத்தில், இந்த சீரியலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் உள்ளூர் சூழல் ஹைதராபாத்தில் இல்லை என்பதால் இந்த சீரியலுடன் பாக்கியலட்சுமி சீரியலை இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில், ஒளிபரப்பு செய்யப்ட்டது.
ஆனால் இந்த மகாசங்கம எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மேலும் இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பான வாடிநம்மாவின் படப்பிடிப்பும் அங்கே நடைபெற்று வருவதால், இந்த சீரியல் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் மாற்றுவது எளிதாக இருந்தது.
ஆனாலும் தற்போது சீரியலுக்கு வரவேற்பு இல்லததாலும், தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும், ஹைதராபாத்தில் இருந்து தற்போது குன்னக்குடிக்கு வந்துவிட்டதாக நாயகி சுஜிதா தனுஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்லும் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.