பாண்டியன் ஸ்டோர்ஸ் அரசியின் நிஜ காதலன் யார் தெரியுமா? அவரே போட்ட போஸ்ட்டில் சிக்கிய தகவல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரசியின் நிஜ காதலன் பற்றிய தகவல் காணொளியுடன் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பிரபல தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இந்த சீரியலில், முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டாம் அதே நடிகர்களுடன் சிலருடன் மாமியார்- மருமகள்கள் பந்தம் என்ற தொனிப் பொருளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாண்டியனின் கடைசி பெண்ணை ஏமாற்றி கோமதி வீட்டிலுள்ள குமரவேல் எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும் என காதலிப்பது போன்று நடித்து வந்தார்.
குடும்பத்தின் மானம் தன்னால் போய் விடக் கூடாது என முடிவு செய்த அரசி, காரில் கிடந்த தாலியை தனது கையால் கட்டிக் கொண்டு குமரவேல் தான் காட்டினார் என கதையை மாற்றிக் கூறி முத்து வேல், சக்திவேல் வீட்டிற்கு மருமகளாக சென்று விட்டார்.
நிஜ காதலன் யார் தெரியுமா?
இந்த நிலையில், சீரியலில் அரசி- குமரவேல் தம்பதிகள் செய்யும் அலப்பறைகள் காட்சிகள் சீரியலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இப்படியொரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில், அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்தியா சாய் பற்றிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது, சத்தியா சாய் சுமாராக 10 வருடங்களாக காதலித்து வருகிறார்.
காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். காணொளியை பார்த்த பலரும் “அழகான காதல் ஜோடி" என ஜோடியை வாழ்த்தும் வகையில் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |