Pandian stores:செந்திலுக்கு விழுந்த அறை.. துரோகியான பழனி- படபடப்பில் கதைக்களம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பழனி செய்த துரோகத்தை தாங்க முடியாமல் செந்தில் சண்டைக்கு போக அந்த சந்தர்ப்பத்தில் பளார் என ஒரு அறை விடுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2
பிரபல தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியல்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக முடித்த இந்த சீரியல் தற்போது தன்னுடைய இரண்டாவது பாகத்தை துவங்கியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் நடிக்கிறார்கள். 2ஆம் பாகத்தில் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

துரோகியான பழனி
இந்த நிலையில், தங்கமயில் செய்த பித்தலாட்டங்கள் அனைத்தும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரிய வந்த வண்ணம் உள்ளது. இந்த விடயங்கள் அனைத்தையும் தனக்குள் வைத்துக் கொண்டு சரவணன் மற்றவர்களிடம் சாதாரணமாக இருக்கிறார்.
இதற்கிடையில், பழனிக்கு குமரவேல் குடும்பத்தினர் ஒரு மளிகை சாமான்கள் வாங்கும் கடையை கொடுக்கிறார்கள். இதனால் மனம் உடைந்து போன பாண்டியன் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசுகிறார்.

தனக்கு எதிராக பழனி தான் திட்டம் போட்டு இந்த வேலையை செய்திருப்பார் என மோசமாக பேசி விடுகிறார். அத்துடன் இல்லாமல் செந்திலும் சரவணனும் கடைக்கு சென்று சண்டைக்கு செல்கிறார்.
அப்போது குமரவேலின் தந்தை செந்திலை ஒரு அறை அறைந்து விடுகிறார். இதனால் சண்டை முற்றிப்போக சுகன்யா, பழனி இருவரும் சேர்ந்து சண்டையை விலக்கி வைக்கிறார்கள். இருந்த போதிலும் சண்டை ஓய வில்லை கடுப்பான பழனி, “ஆமாம், நான் துரோகி தான்..” என ஒப்புக் கொள்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |