உண்மையை உளறிய பொய் தங்கமயில்- கேட்டவுடன் கண்டுபிடித்த மீனா- சரவணனுக்கு இது தெரியுமா?
வீட்டிலுள்ளவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் தன்னுடைய உண்மையான வயதை உளறி விட்டார். இதற்கு சரவணன் என்ன பதில் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல், தன்னுடைய முதல் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சீரியலில் கடந்த வாரங்களில் பல டுவிஸ்ட்கள் வெளிச்சத்திற்கு வந்து குடும்பத்தில் பெரும் பிரச்சினைகள் வெடித்தன.

அரசி திருமணம் முதல் தங்கமயில் கர்ப்பம் வரை அனைத்தும் ஏற்றுக் கொள்ள முடியாத இடியாகவே உள்ளது.
வசமாக சிக்கிய தங்கமயில்
இந்த நிலையில், பாண்டியன் சரவணனுக்கு பெண் கேட்டு போகும் பொழுது தன்னை விட பெரிய பெண்ணான தங்கமயிலை அவருடைய அப்பா அம்மா இருவரும் பொய் கூறி திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அதே போன்று அவர் பள்ளிப்படிப்பை கூட சரியாக முடிக்காதவரை ஒரு பட்டதாரி என்றும் கூறுகிறார்கள். இந்த விடயம் சரவணனுக்கு தெரிந்த போது அவரை கடும் கோபத்துடன் அவரின் அம்மா வீட்டில் விட்டு விட்டு வருகிறார். அதன் பின்னர், தன்னுடைய குழந்தை மயில் வயிற்றில் இருப்பதால் பழைய கோபத்தை மறந்து சரவணன், தங்க மயிலை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்கிறார்.

இந்த விடயமும் கடைசியில் பொய் என்று தெரியவந்ததும், மனம் உடைந்து போன சரவணனை அன்று முதல் தங்கமயிலிடம் முகம் கொடுத்துக் கூட பேசுவது இல்லை. அத்துடன் தங்கமயிலின் தந்தை கடையில் பணம் திருடியும் சிக்கியுள்ளார்.
இது பிரச்சினை வந்து கொண்டிருக்கும் பொழுது தங்கமயிலுக்கு தற்போது மூப்பது வயது என தெரியவருகிறது. அதையும் தங்கமயில் தான் உளறி விடுகிறார். வயது விடயம் சரவணனுக்கு இதுவரையில் தெரியாது.
மீனாவும், ராஜுவும் இந்த விடயம் குறித்து நோண்டி கேட்பார்கள். அதற்கு தங்கமயில் எனக்கு ஒன்றும் மூப்பது வயது இல்லை என சமாளிக்க முயற்சி செய்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |