ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு சென்ற எஜமானி... ஓடிவந்து மருத்துவமனையில் நாய் நிகழ்த்தும் பாசப்போராட்டம்
துருக்கியில் உரிமையாளர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதை அறிந்த நாய் பல கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் பின்னே மருத்துவமனை வரை ஓடிய காணொளி வைரலாகி வருகின்றது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த நாயினை வளர்த்து வருகிறார்.
அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் போகவே, ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவர் மருத்துவமனைக்கு செல்வதை அறிந்த அவரது பாசக்கார நாய் அவரது மீது கொண்ட அன்பினால் பல கிலோமீட்டர் ஆம்புலன்ஸ் பின்னே மருத்துவமனை வரை சென்றுள்ளது.
மருத்துவமனை ஊழியர்கள் நாயின் கழுத்தை பிடித்து வெளியே இழுத்தும் வரமறுத்த நாய், அங்கே படுத்துவிட்டது.
தற்போது அவர் மீண்டும் எப்போது வீட்டுக்குவருவார் என நாய் காத்திருக்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
This devoted dog followed an ambulance carrying his owner and waits in front of the hospital in hopes of reuniting, in Istanbul, Turkey pic.twitter.com/mnelL8n7Sk
— TRT World (@trtworld) June 10, 2021