உலகின் கொசு தொல்லையில்லாத ஒரே நாடு – அதிசய காரணம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் பாம்பு, சிங்கம் போன்ற விலங்குகள் காரணமாக ஏற்படும் மரணங்களைக் காட்டிலும், கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே கொசுக்கள் இந்த பூமியில் வாழ்ந்து வருகின்றன என்றால் அது மிகையல்ல. இவ்வளவு நீண்ட காலமாக பரம்பரை மாற்றத்துடன் வந்துள்ள இவை, மனித வாழ்க்கைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் உயிரினங்களாக இருக்கின்றன.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், கிராமம் முதல் நகரம் வரை கொசுக்கள் பரவலாக காணப்படுகின்றன. குறிப்பாக, மழைக்காலத்தில் இது மிகுந்த அளவில் பெருக்கம் பெறுகிறது.
மலேரியா, டெங்கு, சீகுன்குன்யா, ஜிகா வைரஸ் போன்ற பல ஆபத்தான நோய்கள் கொசுக்களால் பரவுவதால், இது ஒரு பொதுச் சுகாதார பிரச்சனையாக மாறியுள்ளது.
கொசுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியமாக உள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வும், தடுப்பு முறைகளும் மிகவும் முக்கியமாகும்.
கொசுக்கள் இல்லாத உலகில் ஒரே நாடு
கேரளாவின் ஈரமான கடற்கரைப் பகுதிகள், தமிழ்நாடு, மும்பை போன்ற மக்கள் செறிவுள்ள நகரங்கள் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் குளிர்ச்சியான மலைப்பகுதிகள் என இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொசுக்களின் தொல்லை தொடர்ந்து காணப்படுகிறது.
இந்தியா மட்டுமல்ல; பூமியின் பெரும்பாலான நாடுகளிலும் கொசுக்கள் பரவலாக காணப்படுகின்றன.
இவை மலேரியா, டெங்கு, ஜிகா போன்ற பல அபாயகரமான நோய்களை பரப்புவதால், உலகளாவிய அளவில் பொதுசுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது.
ஆனால், இந்த இயல்புக்குச் விதிவிலக்காக இருக்கும் ஒரே இடம் உள்ளது அது தான் ஐஸ்லாந்து.
இந்த நாட்டில் ஏன் கொசுக்கள் இல்லை
உலகத்தில் இயற்கையின் அற்புதங்களை காக்கும் சில நாடுகளில், ஐஸ்லாந்து ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு பாம்பு இல்லாத நாடு என்று அழைக்கப்படுகிறது.
ஏனெனில் இங்கு பாம்புகள் மட்டுமல்ல, பிற ஊர்வன்களும் இல்லை. இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், ஐஸ்லாந்தில் ஏரிகள், குளங்கள், ஈர நிலங்கள், மற்றும் சுமார் 1300-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் இருந்தாலும் கூட, கொசுக்கள் மட்டும் இங்கு காணப்படுவதில்லை.
விஞ்ஞானிகள் கூறுவதன்படி இதற்கு காரணம் ஐஸ்லாந்தின் குளிர்ச்சியான மற்றும் மாற்றம் அடையும் வானிலை, கொசு முட்டைகள் வளர்ந்து குஞ்சுகளாக மாறுவதற்குத் தேவையான சூழ்நிலை இல்லாமை, இதனால்தான் கொசுக்கள் இங்கு உயிர்வாழ முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த காரணங்களின் அடிப்படையில், ஐஸ்லாந்து மக்கள் வாழ மகிழ்ச்சியான நாடாக திகழ்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, ஐஸ்லாந்தை ஒரு அமைதி நிரம்பிய, நோய்கள் குறைந்த, இயற்கையோடு இணையக்கூடிய நவீன நாடாக மாற்றியுள்ளது.
இது தவிர ஐஸ்லாந்து ஒரு தனித்துவமான நாடு. இங்கு மக்கள் தொகையும் வீடுகளும் மிகவும் குறைவாக உள்ளதால், மனிதனால் உருவாக்கப்படும் கொசு இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழல்கள் இங்கு இல்லை.
மேலும், ஐஸ்லாந்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை, கொசு முட்டைகள் மற்றும் லார்வாக்களின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வை தீவிரமாகத் தடுக்கும். இவை அனைத்தும் சேர்ந்து, கொசுக்கள் இங்கு இனப்பெருக்கமடைய முடியாத சூழலை உருவாக்குகின்றன.
அதனால் தான், ஐஸ்லாந்து கொசு தொல்லையில்லாத நாடாக அமைந்துள்ளது, மேலும் இது மக்கள் நலனுக்கும், சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கும் ஒரு முக்கிய காரணமாகவும் திகழ்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |