அழுக்கு படிந்த நகையை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? தக்காளி செய்யும் அற்புதம்
அழுக்கு படிந்து மங்கிப் போன தங்கநகையை வெறும் தக்காளியை மட்டும் வைத்து எவ்வாறு பளபளப்பாக மாற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய பெண்கள் பெரும்பாலானோர் நகை அணிவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அலங்காரப் பொருட்களில் ஒன்றாக இருக்கும் நகையின் விலையும் நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே செல்கின்றது.
இவ்வாறு பெண்கள் வைத்திருக்கும் நகைகள் அழுக்கு படிந்து மங்கி விடுவது இயல்பு. தங்க நகைகளை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியமாகும். இந்த அழுக்கை நீக்கி நகைகளை புதிது போன்று பளபளப்பாக எப்படி மாற்றுவது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி: ஒரு பாதி
உப்பு: சிறிதளவு
துணி: மென்மையான பருத்தி துணி அல்லது டிஷ்யூ பேப்பர்
செய்முறை
முதலில் பாதி தக்காளியில் கால் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, விதைகள் அனைத்தையும் நீக்கிவிடவும். விதையை நீக்கிய தக்காளியில் சிறிதளவு உப்பைத் தூவவும்.
தக்காளி துண்டை வைத்து நகைகளை மெதுவாகவும், கவனமாகவும் தேய்க்க வேண்டும். இதனால் நகையின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை எளிதில் சுத்தம் செய்ய முடியும்.
நன்றாகத் தேய்த்த பிறகு, நகைகளை சுத்தமான நீரில் அலசவும். இறுதியாக, ஒரு மென்மையான பருத்தி துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நகைகளை மெதுவாகத் துடைத்து உலர விடவும்.
பொதுவாக நகைகளை அணிந்து கழற்றிய பின்பு மென்மையான துணியால் துடைத்து வைக்கவும். குளிக்கும் போது, சமையல் செய்யும் போது அல்லது வேறு ஏதேனும் வேலைகளை செய்யும் போது நகைகளை அணிய வேண்டாம்.
நகைகளை வெயிலில் அல்லது வெப்பமான இடத்தில் வைக்க வேண்டாம். நகைகளை வேறு நகைகளுடன் சேர்த்து வைக்க வேண்டாம். விலை உயர்ந்த நகைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |