நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண்! கண்முன் தோன்றிய 8 வயது மகன்: பின்பு நடந்த ட்விஸ்ட்
தாய் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தனது எட்டு வயது மகனுக்காக வாழ வேண்டும் என்ற வைரலாக்கியதுடன் 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிரோடு வந்துள்ளது நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய்
மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தின் பதாரியா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சோனம் டாங்கி. இவர் தனது சகோதரருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பைக் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது, மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்றுள்ளனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வாகனம் சறுக்கியதால், பைக்கிலிருந்த சோனம் தவறி ஆற்றில் வீழ்ந்து 5 கிலோ மீற்றர் வரை அடித்துச் செல்லப்பட்டார்.
அவரது சகோதரர் பதறிப் போன நிலையில், உடனடியாக சகோதரியை காப்பாற்ற ஆற்றில் விழுந்து, முயற்சி செய்தும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆற்றின் நடுவில் இருந்த கட்டுமான பணி நடந்து வரும் பாலத்தின் கீழ், ஒரு இரும்பு கம்பியை பிடித்தபடி நின்றுள்ளார் சோனம். இரவு முழுவதும் சோனம் நீரில் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதிகாலையில் மீட்புக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மீண்டும் அடித்துச் செல்லப்பட்ட சோகம்
நீரோட்டம் அதிகமாக இருந்ததால் மீட்க முடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், குறித்த பெண்ணிற்கு லைஃப் ஜாக்கெட்டை கொடுத்து, படகு அருகே அவரை இழுக்க முயன்ற போது, மீண்டும் நீரினால் பல கிலோ மீற்றர் தூரம் அடித்துச் செல்லப்பட்டு மரக்கட்டை ஒன்றில் சிக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புக் குழு ஒன்றினைந்து அவரைக் குழாய் ஒன்றின் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோனம் கூறுகையில், "பாலம் ஒன்றின் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த போது, எனது பலம் குறைய ஆரம்பித்தது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை வேறு பெய்தது.
ஆனால், எனது 8 வயது மகனின் முகத்தை நான் மனதில் நினைத்துக் கொண்டேன். இதனால்,அவனுக்காக நான் வாழ வேண்டும் என எனக்குள் நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.
சுமார் 10 மணி நேரத்திற்கு மேல், இரவு முழுவதும் மழை, நீர் என கடுமையான சூழலில், மகனுக்காக வைராக்கியத்துடன் செயல்பட்டு பின்னர் மீட்கப்பட்ட தாயை அனைவரும் வேற லெவலில் பாராட்டி வருகின்றனர்.