இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கின்றதா? நிச்சயம் நீங்கள் லட்சாதிபதியாகாலாம்
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய நோட்கள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள இந்த நோட்டு இந்தியாவின் மிக அபூர்வ நோட்டு (Rare Rupee Notes) எனலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி.
அதன்படி இந்த சிறப்பு வாய்ந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் 7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நோட்டின் சிறப்பு என்னவென்றால், சுதந்திரத்திற்கு முன்பு அப்போதைய கவர்னர் ஜே.டபிள்யூ.கெல்லியின் கையெழுத்துடன் உள்ளது.
இந்தக் நோட்டு 80 ஆண்டுகள் பழமையானது. இது 1935 இல் பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. இது தவிர 1966ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு ரூ.45 ஆகும். அதே போல 1957 நோட்டு ரூ.57க்கு கிடைக்கிறது.
இந்த நிலையில் ஆன்லைன் ஏலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, மேலும் பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ஆன்லைனில் மாற்றுவதன் மூலம் மக்கள் பல கோடி ரூபாய் பெற்று வருகின்றனர்.