வருடத்தின் கடைசி சூரிய கிரகணத்தால் பணக்காரராகும் 3 ராசிகள்...யார் யாருக்கு பேராபத்து தெரியுமா?
வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி நிகழவுள்ளது.
நம்பிக்கைகளின் படி கிரகணங்கள் ஒரு அசுப நிகழ்வாக கருதப்படுகிறது.
இக்காலத்தில் எந்த ஒரு நல்ல காரியங்களும் செய்யப்படுவதில்லை.
சூரிய கிரகணமானது மாலை 4.29 முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இப்போது சூரிய கிரகணத்தின் போது எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பணத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் சூழ்நிலைகளானது சாதகமாக இருக்கும். தொழில் செய்பவர்கள் இந்நாளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் நிறைய பண பலன்களைப் பெறுவார்கள். இந்நாளில் உங்களின் பணப் பிரச்சனைகள் குறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்நாள் லாபகரமான நாளாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அற்புதமான நாளாக இருக்கும். இந்நாளில் பொருளாதார வளர்ச்சியுடன் பண ஆதாயமும் உண்டாகும். மேலும் நல்ல பண வரவைப் பெறுவீர்கள்.
எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்?
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது மிதுனம், கன்னி, துலாம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் இவர்கள் அதிக பிரச்சனைகளுடன், நிறைய சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.