இந்த தேதியில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் - ஜாக்கிரதை
எண்கணிதத்தில் சில தேதிகளில் பிறந்தவர்கள் புண்ணில் உப்பு தடவுவதில் வல்லவர்கள் எனப்படுகின்றது. அதாவது அவர்கள் மற்றவர்களை அவர்களின் செயலால் பேச்சால் புண்படுத்துவார்களாம்.

எண்கணிதம்
எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதியை வைத்து அவர்களின் ஆளுமை சிறப்பாக கணிக்க முடியும் என கூறப்படுகின்றது. அதில் ஒவ்வொரு தேதியில் பிறந்தவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை காயப்படுத்துவதில் வல்லவர்கள் எனப்படுகின்றது.
அவர்கள் மற்றவர்களுடன் சாதாரணமாக பேசும் போது கூட அவர்களை புண்படுத்தும் வகையில் இருக்குமாம்.
ஆனால் பல சமயங்களில், தங்கள் வார்த்தைகள் ஒருவரை எவ்வளவு ஆழமாகப் புண்படுத்தியுள்ளன என்பதை அவர்கள் யோசிக்க கூட மாட்டார்களாம்.

எண் கணிதத்தின்படி, 3 மற்றும் 5 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துகிறார்கள் எனப்படுகின்றது.
எந்த மாதத்திலும் 3, 12, அல்லது 21 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு, வியாழனால் ஆளப்படும் எண் 3 இருக்கும்.
5, 14, அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு, புதனால் ஆளப்படும் எண் 5 இருக்கும். இவர்கள் தான் புண்படுத்து தேதியில் பிறந்தவர்கள் எனப்படுகின்றது.

தீக்காயத்தில் உப்பு தூவும் குணம்
எண் 3 மற்றும் எண் 5 கொண்டவர்கள், புண்ணுக்குப் புண் சேர்ப்பதில் கைதேர்ந்தவர்கள். அதாவது ஒருவரை இவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்களை கேலி செய்தே அவர்களை புண்படுத்தி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாவர்கள்.
அவர்கள் கஷ்டப்படுவதையும் ரசிக்கும் சக்தி இவர்களிடம் உண்டு என எண்கணிதத்தில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒருவர் மீது வன்மம் கொண்டுவிட்டால் இந்த நபரை புண்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி விடுவார்களாம்.

எனவே, இந்த நபர்களுடன் பகை கொள்வது ஆபத்தானது. எண் 3 மற்றும் 5 கொண்டவர்கள் கூர்மையான புத்தி உடையவர்கள். அவர்கள் அடிக்கடி நகைச்சுவையாகப் பேசி, மற்றவர்களைப் புண்படுத்தும் விஷயங்களைக் கூறுவார்கள்.
தாங்கள் சொல்வது சரி என்பதை நிரூபிப்பதற்காக, அவர்கள் தங்களைப் பற்றி அடிக்கடி அளவுக்கு அதிகமாக விளக்கி விளக்கி கூறுவார்களாம். இதனால் இவர்களை சாமர்த்திய சாலிகள் என கூறுகிறார்கள்.
இந்தத் திறமை, மற்றவர்களின் பலவீனங்களை எளிதில் கண்டறிய அவர்களுக்கு உதவுகிறது. இவர்கள் மற்றவர்களின் உணர்விற்கு எப்போதும் மதிப்பளிக்க மாட்டார்களாம்.
அப்படி இவர்கள் மதிப்பளித்தால் இவர்களை போல நண்பன் வேறு யாரும் இல்லை எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).