வெயிலில் அலைந்து விட்டு இந்த விடயங்களை செய்யாதீங்க... மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுமாம்
வெயிலில் அலைந்துவிட்டு வீட்டிற்கு வந்ததும் சில தவறுகளை செய்வது உடலில் சில பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்த தவறை செய்யாதீங்க
வெயிலில் சென்றுவிட்டு வந்த உடனே முகத்தை கழுவாமல், சிறிது நேரம் மின்விசிறியில் உட்கார வேண்டும். உடல் தளர்வான பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் வெற்ற பக்கவாத பிரச்சனை வராமல் இருக்குமாம்.
வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனேயே தண்ணீர் குடிக்க வேண்டாம். குறிப்பாக ஃப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் குடிக்கக்கூடாது. ஏனெனில் இது உடல் வெப்பநிலையை மோசமாக்கி ஆரோக்கியத்தை பாதிக்குமாம்.
வெயிலில் இருந்து வந்த உடனே குளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது குளிர்ச்சி மற்றும் சூடான உணர்வை கொடுப்பதுடன், இதனால் சளி, காய்ச்சல், உடல் விறைப்பு பிரச்சனை ஏற்படுமாம்.
வெயிலிருந்து வந்த உடனேயே ஏசியில் அமர்வதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களது உடல் வெப்பநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தி சளி, இருமலை ஏற்படுத்துமாம்.

Sandhya Raagam: கைவிட்டுச் செல்லும் ரகுராமின் பூர்வீக வீடு... மாஸ் எண்ட்ரி கொடுத்து காப்பாற்றிய மாயா
பின்பு வெயிலிருந்து வீட்டிற்கு வந்த உடனே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் செரிமான பிரச்சனை ஏற்படுவதுடன், வயிற்றுப்போக்கு அபாயமும் ஏற்படுமாம்.
image: istock
கோடை வெயிலில் இருந்து வந்ததும், உடனே முதலில் சிறிது ஓய்பு எடுக்க வேண்டும். வியர்வைக் காய்ந்த பின்பு தான் பிற விடயங்களை செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |