பர்ஸ் காலியா இருக்கா? இந்த ஒரே ஒரு அதுல வையுங்க....அடுத்த நாளே கை நிறைய பணம் வீடு தேடி வரும்!
‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அதாவது ஒரு வேளை உணவு உங்களுக்கு அடுத்தவர் கொடுத்தால் கூட காலம் முழுக்க அவர்களுக்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் வீட்டில் சால்ட் உப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். கல் உப்பை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உப்பை வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வாங்க வேண்டும்.
இப்படி செய்ய பணம் கை நிறைய புழங்கும். நீங்கள் சம்பளத்தை வாங்கியவுடன் வீட்டிற்கு வந்து முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை போட்டு அதில் பணத்தை வையுங்கள்.
ஒரு நாள் முழுவதும் விட்டு விட்டு மறுநாள் காலையில் அந்த பணத்தை எடுத்து நீங்கள் எங்கு வைக்க வேண்டுமோ!
அங்கு வைத்துக் கொள்ளுங்கள். கல் உப்பின் மீது வைக்கப்பட்ட சம்பள பணம் வீண் விரையம் ஆகாது.
நல்ல காரியத்திற்கு செலவழியும் என்பது நம்பிக்கை.
மேலும் நீங்கள் பீரோவில் பணம் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்த இடத்தில் சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்து விடுங்கள்.
மணிபர்ஸில் கூட இது போல சிறிய பாக்கெட்டில் கல் உப்பை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உப்பு இருக்கும் இடங்களில் இருந்து பணத்தை எடுக்கும் பொழுது பணமானது மென்மேலும் பெருகுவதாக கூறப்படுகிறது.
இதை நம்பிக்கையோடு செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் வகையில் சில விஷயங்கள் நடைபெறும்.
பணம் சேர மேலும் சில குறிப்புகள்
- வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது மண் பாண்டத்தில் நீர் விட்டு அதில் சில கொத்தமல்லி இலைகளை போட்டு வைக்கவும். தினசரி புதிதாக செய்யவும்.
- சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு அரிசியில் புதையுமாறு செய்யவும். இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை. ஆறு மதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
- வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
- வீட்டினுள் தென் கிழக்கு மூலையில் அரை கிலோ சோளம் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி தொங்க விடலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.