என் சீடர்கள் தொல்லை... மன உருகிய நித்தியானந்தாவின் புதிய பதிவு! என்ன ஆயிற்று?
போலீசரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு சொற்பொழிவு வீடியோவை வெளியிட்டு பேசி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் மெலிந்த நிலையில், தான் உயிருடன் தான் இருக்கிறேன் மீண்டு வருவேன் என கூறி அதிர்ச்சியளித்திருந்தார்.
இந்த நிலையில், நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், பரமசிவன் ஆசிகள்.. அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது.
எனக்கு, புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை.
மேலும், சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது.
தொடர்ந்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், என்னால் எந்த உணவும் சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டவுடன் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. சரியான உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.
உறவில் இது ரொம்பவே முக்கியம்... நடிகை நித்தி அகர்வாலின் ஓபன் டாக்! ஆடிப்போன ரசிகர்கள்
என் சீடர்கள் தன்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான்.
எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைபடத் தேவையில்லை. எனது கிரகங்கள், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன.
எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை. தற்போது கைலாசாவில் சிறிய விமானம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை.
அடுத்ததாக எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை.
இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார்.
என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர் என நித்தி தெரிவித்து உள்ளார்.