இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி! விடிய விடிய பார்த்து ரசித்த மக்கள்
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷாகந்தி மலர் தமிழ் நாட்டில் கோவையில் நேற்று பூத்துள்ளது. நிஷாகந்தி பூ மாலை 7 மணிக்கு மலர தொடங்கி அதிகாலை 4 மணிக்கு வாடிவிடும். விஷ்ணு படுக்கையில் இருப்பது போல் தோற்றம் இருப்பதால் இது ஆனந்த சயனபூ என்று அழைக்கப்படுகிறது.
மேலும், நறுமணம் என பொருள்படும் நிஷாகந்தி பூ மலையாள இலக்கியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க இடம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த பூவானது மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே பூக்கும்.
இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பூ இரவில் மட்டுமே பூக்கும் விடிந்ததும் வாடிவிடும். இந்த அரிய மலர் கோவை அன்னூரில் நேற்று இரவில் பூத்தது. இந்த பூ மலர்வதை ஏராளமான மக்கள் இரவில் காத்திருந்து பார்த்துள்ளனர்.
இந்த நிஷாகந்தி மலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த பூவாக பயன்படுகிறது. ஒரு இலையிலேயே பல பூக்கள் பூப்பதும் உண்டு. இதை வீடுகளில் வளர்ப்பதும் எளிது. சிறு இலையை நட்டாலே அதில் இருந்து நிறைய செடிகள் கிடைக்கும் என்றார்.