ஆசையோடு ஐபோனை பிரித்த நபர்: நொடிப்பொழுதில் சோகமான முகம்! உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
சமீப நாட்களாக ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக தவறான பொருட்கள் அனுப்பப்ட்டு வாக்கையாளர்களை ஏமாறும் நிலைக்கு செல்லும் காட்சி அதிகமாக வெளிவருகின்றது.
சண்டிகரைச் சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் கடந்த வாரம் ஃபிளிப்கார்ட்டில் ரூ.51,990 மதிப்புள்ள ஐபோனை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட போன் சில தினங்களில் தனது கையில் கிடைக்கப்போகின்றது என்ற ஆசையுடன் இருந்த சிம்ரன்பாலுக்கு பார்சலும் வந்துள்ளது.
டெலிவரி பாய் பார்சலை கொடுத்த போது, ஐபோனை அவதானிக்கும் போது தனது ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் என்பதை காணொளியாக எடுக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதையடுத்து, டெலிவரி பாயும் காணொளி எடுத்துள்ளார்.
குறித்த பார்சலை பிரித்த போது ஐ-போனுக்குப் பதிலாக இரண்டு நிர்மா சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிம்ரன்பால், டெலிவரி பாயிடம் ஓடிபியை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டு வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய ஃபிளிப்கார்ட் நிறுவனம், 'வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு எதிரான ஒரு விஷயத்தையும் ஃபிளிப்கார்ட் ஏற்றுக் கொள்ளாது.
எங்களது குழுவினர் சிம்ரன்பால் இருக்கும் இடதிற்கு சென்று அவருடன் பேசி அவரின் அனைத்து பணமும் கொடுக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' எனக் கூறியுள்ளது.