இரவில் மொபைல் போனை சார்ஜ் செய்பவரா நீங்கள்? அப்போ இந்த தவறுகளை செய்திடாதீங்க
இன்றைய அவசர உலகில் செல்போன் வைத்திராத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு வாழ்வில் முக்கிய அம்சமாக மொபைல் மாறிவிட்டது.
இந்நிலையில் பலரும் செல்போனை தூங்கும் போது சார்ஜ் செய்யும் பழக்கத்தினை வைத்துள்ளனர். அவ்வாறு மொபைல் போனை சார்ஜ் போடுவது ஆபத்தில் கொண்டு செல்கின்றது.
நீங்கள் புதிதாக மொபைல் போன் வாங்கியவுடன் 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு போன் தனது முழு சார்ஜ் பூர்த்தியடைய வெறும் 3 மணி நேரம் போதும். அப்புறம் எதற்கு நாம் 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.
தூங்கும் போது நமது போன் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதால் போனில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. போன் தனது முழு சார்ஜ்யை அடைந்தவுடன் சார்ஜ் ஏறுவது நின்றுவிடும்.
அதே போல் சில நேரங்களில் போன் சூடாகவும் வாய்ப்புள்ளது. அதனால் தான் போனை இரவு நேரங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
போனை மெத்தையில் வைத்து சார்ஜ் போட்டுக் கொண்டே தூங்கும்போது ஒருவேளை போன் சூடாகி மெத்தை தீ பற்றிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே மெத்தையில் தூங்கும் போது சார்ஜ் போட்டுக்கொண்டே தூங்குவதை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.
அதே போல் இரவு வேளைகளில் கரண்ட் கட் ஆகி மீண்டும் வரும், அந்த மாறி சமயங்களில் அதிக வோல்ட்டேஜ் நம் போனிற்கு வந்தால் நம் போன் பழுதடைய நிறைய வாய்ப்புள்ளது.