விமான விபத்து: இனி பயணிகளுக்கு கவலை இல்லை.. மெய்சிலிர்க்கும் புதிய கண்டுபிடிப்பு
அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து, இனி வரும் காலங்களில் உயிர் சேதம் நடக்காமல் இருப்பதற்கு புதிய கண்டுபிடிப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான விபத்து
கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களில் மருத்துவ மாணவர் விடுதியொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
விமானத்தில் பயணித்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கிறார். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தை தடுக்கும் புதிய கண்டுபிடிப்பு
இந்த நிலையில் விபத்துக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானங்கள் சில நேற்றைய தினம் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டது. விபத்துக்களை குறைப்பதற்காக புதிய கண்டுபிடிப்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, விமானத்தில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் பயணிகள் இருக்கும் குறித்து பகுதி மாத்திரம் இரண்டு பெரிய பராசூட்களுடன் தரையிரங்கும். அல்லது பெரிய பலூன்கள் மூலம் பாதுகாப்பாக தரையில் இறக்கப்படும்.
இதனால் வானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது சேதம் ஏற்பட்டால் உயிர் சேதங்கள் குறையும். இந்த புதிய தொழில் நுட்பம் கூடிய விரைவில் நடைமுறைக்கு வரும் என நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |